பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 233

அன்றி, எந்நாட்டவருக்கும், எம் மதத்தினருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்துமாறு எழுதப்பட்டதாகப் புலப்படவில்லை.

கடவுளாலேயே நேரிடையாகச் சொல்லப்பட்டு, இரண்டாவது ஆட்களாலே Second hand person னால் எழுதப் பெற்ற பகவத் கீதை, பைபிள், திருக்குரான் போன்றவைகூட, நேரிடையான பொருளை ஓர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ கொடுத்து விடுகின்றது.

ஆனால், திருக்குறள் தமிழ்தான் அதிலுள்ள எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்கள் தான். உலகத்திலுள்ள தத்துவங்கள் அத்தனையும், மதத் தத்துவங்கள் அனைத்தும், தங்களுடைய அடிப்படைகளுக்கு ஏதாவது கிடைக்காதா என்று, குறளை மட்டும் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் திருக்குறள் பெருமை என்னே!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலக் கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் அத்தனைபேரும், அவரவர் மதக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்தப் பிறகும், இதற்குள்ளே இன்னும் வேறு ஏதோ பொருள் பொதிந்திருக்க வேண்டுமென்று, மேல் நாட்டுத் தத்துவவாதிகளும், பேராசிரியர்களும், அறிவு வெறி கொண்டு தமிழ் மண்ணுக்குப் பறந்து வருகிறார்கள் என்றால், குறளை ஒருவன் எழுதினான் என்பதற்குப் பதில் குறள் இயற்கையாகவே தோன்றிய ஒன்று என்று கூடச் சொல்லி விடலாம். காலத்தைக் கடந்த ஒரு மத நூல் இதுவரையில் இல்லை. ஏனென்றால், அந்த மதத் தலைவரின் பிறப்பும் இறப்பும் காலண்டரில் தெரிகின்றது.

குறளாசிரியர் எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார் என்றுகூட இதுவரைத் தெரியவில்லை.

அதன் உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் அவரவர் முடிவுக்குக் கிட்டிய மதிப்பீட்டை வைத்துக் கொண்டுதான் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இப்படி, உட்பொருளைக் கொண்டு, புதைபொருள் ஆராய்ச்சிக்கு இலக்கான நூல் உலகத்திலேயே ஒன்றுகூட இல்லை - திருக்குறளைத் தவிர: இந்தக் குறளுக்கு இதுதான் பொருள் என்று வாய் மூடுமுன், ஏன், இதுவாக இருக்கக்கூடாது என்ற கேள்வியே எழுகின்றது.

வியப்பிற்குரிய பிறப்பை எடுக்காமல், சாதாரண அரச குடும்பத்திலே பிறந்த புத்தர் பெருமான் கூறிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெளத்தர்கள்கூட, அதற்கு முன்னாலே இருந்த சமணர்கள்கூட, திருக்குறளைப் பார்த்து, இதில் எங்கள் கருத்தும் இருக்கின்றது என்று வாதிடுவதைப் பார்க்கும்போது,

திருக்குறள், சமண, பெளத்த மதக் காலங்களையும் தாண்டி ஓடுகின்றது என்பதை வியப்போடு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது. அந்தந்தக் காலத்திலே உரை எழுதிய ஆசிரியர்கள், அவரவர் மதக்