பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 235

சிந்திக்கின்ற அவனுக்கு, அந்த ஆற்றல் இல்லையென்றால், நீங்கள் வருத்தப்படக் கூடாது. அவனைக் கடவுள் படைக்கவில்லை.

திருக்குறள் என்பது, கையில் கிடைத்த பலகாரமல்ல. உங்களது விருப்பம் போல பங்கிடு செய்து உண்பதற்கு.

மாந்தரின் வாழ்க்கைக்கு அது ஒரு மா மருந்து நோய்க்கு ஏற்றபடி நீங்கள் அதை உட்கொள்ள வேண்டும்.

திருக்குறள் தொடங்கிய காலத்திலிருந்து, விளம்பரத்திற்காக உரையெழுதுகின்ற ஆசிரியர்கள் வரை, அதன் துணுக்கம், முடியாத மர்மக் கதையாகவே இருக்கின்றது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

சூழ்நிலையின் காரணமாக நீங்கள் மாறிவிட்டால், பிறக்கப் போகும் தொட்டில்கள், உங்களை மறந்து விடும்! எனவே, எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், இனிமேல் பிறப்பவர்கள் உங்களைத் தூக்கி எறிபவர்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?

எனவே, காலம் கடந்து சிந்தியுங்கள் (without time) தொட்டில் குழந்தைகள் உங்களைத் தொடர்வதற்கேற்ப சிந்தியுங்கள்.

உங்களுடைய விவாதங்கள் அனைத்தையும், அய்யன் திருவள்ளுவரது உயிர்ச் சொல்லோட்டக் குறள் நாதங்கள் காற்றிலிருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றன.

அய்யன் திருவள்ளுவர் முன்னாலே நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கக் கூடாது. அவர் எதிர்பார்த்த, முதிர்ச்சியடைந்த முழு மனிதனை உங்களுடைய ஆய்விலே உருவாக்கிக் காட்டுங்கள்.

திருக்குறளாராய்ச்சியைப் பொறுத்தவரை, இந்த ஆய்வு மாநாடு, அண்ட அளவில் வைத்து மறைந்த சிறு புள்ளியாகக் கருதுகின்றேன்.

ஏனென்றால், அய்யன் திருவள்ளுவன் அண்டத்தைவிட விரிந்தவன் என்பது பொது மக்கள் கருத்து.

இதுவரையில் எழுதிய குறள் உரையாசிரியர்கள், தங்களது பாடையைப் பார்த்துக் கொண்டு எழுதினார்கள். அவர்களுக்குப் பின் யார் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

தன் கருத்தே எதிர்காலக் கருத்தென்று நினைப்பது, பொருள் மாற்ற விஞ்ஞானத்தை அறியாதவர்களின் செயல். -

பொருள் பீறிட்டு வேகமாக மாறுகின்றபோது - மனிதன் மட்டும் மாற மாட்டானா? காலச் சுழற்சி அல்லவா அது?

நேற்றைய கருத்தே - இன்றையே கருத்து என்று கூறுவதற்குப் புது வருடம் எதற்காக? காலண்டர் ஏன்?

'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த நோக்கின் தத்துவத்தில் நாம் வளர்ந்தவர்கள்.