பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 திருக்குறள் சொற்பொருள் கரபி

மக்கட் பேறு எற்றுக்கு என்ற வினாவுக்கு விடையாகப் பரிமேலழகர் கூறுகின்றார்; புதல்வரைப் பெறுதல். அஃதாவது இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும். கடன் மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லாது இறுக்கப்படாமையின், அக் கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல். ஆகவே மக்களின் கடன் தென்புலத்தார்க்குக் கடன் செலுத்துதல் ஆகும் என்று நம்பி வந்தனர் என்று தெரிகின்றது. தென்புலத்தார் என்பவர் பிதிரர் ஆவார். படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டது கடவுட் சாதி. அவர்க்கிடம் தென்திசை யாதலின் தென்புலத்தார் என்றார். இவ்வாறு கூறுபவர் பரிமேலழகர் பிதிரர் என்பார் இற்ந்து போன முன்னோர் அல்லர் என்பது அவர் கருத்து. ஆனால் இன்று பெற்றோர் இறந்து போனால் அவரை நினைந்து அவர்தாம் பிதிரள் என்று கருதி அவர்தம் மக்கள் அவர் இறந்த நாளில் புரோகிதரை அழைத்துப் பொன்னும் பொருளும் கொடுக்கின்றனர். இதனை, திதி, திவசம், சிரார்த்தம் என்றெல்லாம் அழைப்பர். மக்கள் தம் தந்தைக்குச் செய்யும் கடன் இதுதான் என்று இன்றும் பலர் கருதுகின்றனர்.

ஆனால், வள்ளுவரோ இதனை ஏற்றுக் கொண்டார் இலர். வெளிப்படையாகவே மறுத்துள்ளார். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் என்னும் சொல் என்று முழங்கினார். மகன் தந்தைக்குச் செய்யும் கடனாவது எல்லா வகையாலும் சிறந்து விளங்கும் இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்று உலகத்தார் சொல்லும் சொல்லை உண்டாக்குதல் ஆகும் என்பது இக் காலத்திற்கும் எக் காலத்திற்கும் பொருந்துமன்றோ?

இவ்வாறு பல புரட்சிகளை திருவள்ளுவர் ஆற்றியுள்ளார். ஊன் உண்ணுதலை எதிர்த்தார். கள் உண்ணுதலைக் கடிந்தார். கவறாடுதலை இகழ்ந்தார். இவர் செய்துள்ள புரட்சிகளை விரிப்பின் பெருகும். இவரைத் தமிழகத்தின் - ஏன் உலகத்தின் முதற் புரட்சியாளர் என்று வாயார வாழ்த்தி நெஞ்சார நினைந்து அவர் வழி முறைகளில் வாழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோமாக!

- முனைவர் சி. இலக்குவனார்