பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் 毫š - வெற்றிதரினும் ஆதினை விரும்பாதே அவ்வெற்றி தூண்டிற்கொக்கி மீனை விழுங்கினது போலும், 931 ஒன்றுபெற்றுப் பல இழக்கும் சூதாடிக்கும் நலமாக வாழும் முறை உண்டாகுமா? 932 காயை ஓயாது சொல்லி உருட்டினால் பொருள் வருவாய் ஓடிப்போய் விடும். 933 பல இழிவு தந்து பண்பைக் கெடுக்கும் சூதுபோல் வறுமை தருவது வேறில்லை. 934 சூதாடுகாயும் கழகமும் கையும் விடாது அழுந்தியவர் வறுமையாகி விடுவர். was சூதென்னும் மூதேவிக்கு ஆட்பட்டவர் . வயிறு நிறைய உண்ணாது வருந்துவர். 936 சூதாடு கழகத்துக்கு நாளும் சென்றால் பழைய செல்வமும் பண்பும் தொலையும். 937 ;பொருள்கெடுக்கும், பொய்யனாக்கும் التي قg அருள் கெடுக்கும், துன்பத்தில் அழுத்தும், 938 உடையும் செல்வமும் உணவும் மதிப்பும் கல்வியும் எல்லாம் சூதாடியை அடையா: 939 தோற்கத் தோற்கச் சூதில் ஆசைவளரும்: துன்பம் படப்பட வாழ்வில் பற்றுவளரும். 940 190 நட்பியல் அதிகாரம் 94 ஆது வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றது.உம் தூண்டிற்பொன் யற்று. 931 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 932 உருளாயம் ஒவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். 933 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். 934 கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். 935 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியால் மூடப்பட் டார். - 936 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழ்கத்துக் காலை புகின். 937 பொருள்கெடுத்துப் பொய்மேற்கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. - 938 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். 939 இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழ்த்தொறுஉம் காதற்று உயிர். 940 19 | .