பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் - நிறையழிதல் நாணத் தாழ்ப்பாள் இட்ட உறுதிக் கதவைக் காமக் கோடாலி தகர்த்து விடும். 1251 காமம் என்பது சிறிதும் இரக்கம் இல்லாமல் - என் நெஞ்சத்தை நடுயாமத்தும் ஆளுகின்றது. 1252 நான் காமத்தை மறைக்கத்தான் செய்கின்றேன்: திடீரெனத் தும்மல்போல் வெளியாகின்றது. 1253 உறுதியுடையேன் என்று சொல்லுவேன் நான்; என் காமமோ ஒளிவின்றி அம்பலப்படும். 1254 வெறுத்தவர்.பின் செல்லாத மானவுணர்ச்சி காமநோயாளிக்குத் தெரியக் கூடியதன்று. 1255 வெறுத்தவரின் பின்னே செல்ல விரும்புதலால் என்னைச் சேர்ந்த நோய் இரங்கத்தக்கது. 1258 காதலர் காமத்தோடு நாம் விரும்பியன செய்யின் நாணம் என்ற உணர்ச்சி நமக்குத் தெரியாது. 1257 பசப்புடைய காதலனது தாழ்ந்த மொழியன்றோ நம்பெண்மைக் கதவைத் தகர்க்கும் படை. 1258 நெஞ்சம் கூடவிரும்புவதைப் பார்த்துவிட்டுப் பிணங்கச் சென்ற நானும் தழுவினேன். 1259 தீயில் இட்ட கொழுப்புப்போல் உருகுபவர்க்குக் காதலரை நெருங்கி ஊடி நிற்க முடியுமா? 1260 2.56 கற்பியல் அதிகாரம் 126 நிறையழிதல் காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நானுத்தாழ் வீழ்த்த கதவு 1251 காம மெனஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். 1252 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். 1253 ಕ್ಡಿ! என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும். * 1254 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. 1255 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். 彼256 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ட செயின். 1257 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு. so 1259 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்துடி நிற்பேம் எனல். 1260 257