திருக்குறள் தெளிவுரை வினைத்திட்பம் வினையுறுதி என்பது நம் நெஞ்சுறுதி: மற்றையவை உறுதியாகா. வருமுன் காத்தல், வந்தால் தளராமை இவ்விரண்டே அறிஞர் கண்ட வழிகள். முடிந்தபின் வெளியாம்படி செய்வதே திறமை: இடையே வெளிப்படின் பெருந்துன்பம் வரும். அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்; சொன்னபடி செய்தலே முடியாது. பெருமிதம் மிக்கவரின் வினைத்திறத்தை வேந்தன் கேள்விப்பட்டு மதிப்பான். எண்ணியவற்றை எண்ணியபடியே எய்தலாம் எண்ணியவர் உறுதியாக எண்ணினால், ஆளின் தோற்றம் பார்த்து இகழவேண்டாம்; ஒடும் வண்டி பெரிது. அச்சாணி சிறிது. கலங்காது கண்ட காரியத்தைத் தளராது காலம் தாழ்த்தாது செய்க. துன்பம் மேன்மேலும் வந்தாலும் துணிவோடு இன்பந்தரும் காரியத்தைச் செய்க. என்ன உறுதியிருந்தாலும் எடுத்துக்கொண்ட வினையில் உறுதியிலாரை உலகம் விட்டுவிடும். 136 பொருள் 561 662 663 664 665 666 667 668 669 670 அமைச்சியல் அதிகாரம் 67 வினைத்திட்பம் வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. 661 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். 663 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 664 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். 665 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். - 666 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. 667 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது. தூக்கங் கடிந்து செயல். 668 ன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி ... స్లీప్జి பயக்கும் வினை. . 669 ஏனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உல்கு. 670 1 O 137