பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை . அவையஞ்சாமை சொற்பொழிவை அறிந்தவர் பாகுபாடு தெரிந்து இன்னாதவற்றைத் தவறியும் சொல்லார். கற்றவருள் கற்றார் எனப்படுவார் யார்? கற்றவர்முன் எடுத்துச் சொல்ல வல்லவரே. போரில் சாக அஞ்சாதவர் மிகப்பலர்; அவையில் பேச அஞ்சாதவரோ மிகச் சிலர். கற்றவர்முன் கற்றதை எடுத்துச் சொல்லுக; மிகக் கற்றவரிடம் மிகுதியைத் தெரிந்துகொள்க. அவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல முறையாகத் தருக்கநூல் அறிந்து கற்க. வீரர் அல்லார்க்கு வாளோடு என்ன உறவு? மேடைஅஞ்சுவார்க்கு நூலோடு என்ன உறவு? மேடையில் அஞ்சுபவன் கற்ற நூற்படிப்பு போரில் பேடி பிடித்த கூரியவாள் போலும். நல்லவையில் எடுத்துச் சொல்ல இயலாதவர் பல படித்தும் பயனில்லை. படித்தறிந்தும் நல்லவையில் பேச அஞ்சுபவர் படியாதவரினும் கீழ் என்பார்க்ள். மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர் வாழ்ந்தாலும் மாண்டவருக்கு ஒப்பாவர். 1 48 பொருள் 721 722 723 724 725 726 727 728 729 730 அமைச்சியல் அதிகாரம் 73 அவை அஞ்சாமை வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். 721 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். 722 பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். 723 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 724 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்ற்ம் கொடுத்தற் பொருட்டு. - 725 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 726 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். 727 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். 728 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார். 729 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். 730 149