பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் அவை அறிதல் சொற்பொழிவின் விளைவை அறிந்த நல்லவர் கூட்டத்தின் நிலையறிந்து ஆராய்ந்து பேசுக. சொல்லின் நடையறிந்தவர் இடையிடையே கூட்டத்தின் போக்கை விளங்கிச் சொல்லுக. கூட்டம் அறியாது பேச முற்படுபவர் பேச்சு வகையறியார்: வல்லமையும் இல்லார். அறிவுக் குழுவில் நல்லறிஞனாய் விளங்குக: பேதைக்குழுவில் வெள்ளைபோல் நடக்க. அறிஞர் குழுவில் முந்திக்கொண்டு எதனையும் சொல்லாத அடக்கம் மிகநல்ல குணம், நிரம்பக் கற்றார் முன்னே குற்றப்படுதல் வழியிடை வழுக்கி விழுந்தது போலும். தெளிவாகச் சொற்பொருள் அறிவார் அவையில் கற்றவர்தம் கல்வி மேம்பாடு அடையும். உணரும் தன்மை உடையார்முன் கூறுவது வளரும் பாத்தியில் நீர்பாய்ச்சியது போலும். நற்கூட்டத்தில் நன்கு பேச வல்லவர் இழிகூட்டத்தில் மறந்தும் போய்ப் பேசற்க. தன்னிலைக்குத் தகாதவர் கூட்டத்தில் பேசுவது சாக்கடையிற் கொட்டிய அமிழ்தம் போலும். 146 7 11 712 713 714 als of 16 717 7 18 719 720 அமைச்சியல் அதிகாரம் 72 அவை அறிதல் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். 711 இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த் நன்மை யவர். 712 அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லது உம் இல், 713 ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். 714 நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு 715 ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் - ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. 716 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லா ரகத்து. 717 உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 718 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். 719 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். 720 1 47