பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் - குறிப்பறிதல் கூறாமலே முகம்பார்த்துக் குறிப்பு அறிபவன் உலகத்துக்கு என்றும் ஓர் அணியாவான். 701 தெளிவாக உள்ளோட்டத்தை உணர்பவனைத் தெய்வத்துக்கு நிகராக மதிக்க 702 முகச்சாடையினால் உள்ளத்தை உணர்பவரை எது கொடுத்தும் அவையில் அமர்த்திக்கொள்க. 08 குறிப்பைக் கூறாமலே அறிய வல்லவர்க்கும் அறியாதவர்க்கும் உடம்பளவில் ஒற்றுமை. 7Q邨 முகங்கண்டு உள்ளம் காணவில்லை யாயின் கண் என்ற உறுப்பின் பயன் என்ன? 705 முன்னுள்ள பொருளைக் கண்ணாடி காட்டும்; உள் மிக்க உணர்ச்சியை முகம் காட்டும். 706 மகிழ்வையும் வெறுப்பையும் முகம் முந்திக்காட்டும்; முகம்போல் அறியுந்திறம் பிறிதிற்கு இல்லை. 707 நிகழ்வதை உள்ளத்தால் உணர்வார்க்கு முன்னே முகம் பார்த்து நின்றால் போதுமே. 706 பகையா நட்பா என்பதைக் கண் சொல்லும்; - கண்ணின் கூறு தெரிந்தவர்கட்கு. - 709 கூரிய அறிவுடையோம் என்பவர்க்கு அளவுகோலாவது பிறர்கண்ணே வேறில்லை. 710 144 அமைச்சியல் அதிகாரம் 71 குறிப்பறிதல் கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. - 701 யப் படாஅது அகத்தது உணர்வானைத் தய்வத்தோ டொப்பக் கொளல். 702 குறப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். 703 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு 704 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். - 705 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் 706 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் க்ாயினும் தான்முந் துறும். 707 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். 708 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். 709 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற. 710 145