பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை படைமாட்சி போருடல் பெற்றுப் புண்ணுக்கு அஞ்சாத வெற்றிப்படை வேந்தன் செல்வத்திற் சிறந்தது. கெடுதலான இடத்து அஞ்சாத உறுதி துரத்தில் பழம்படைக்கே உண்டு. எலிக்கூட்டம் கடல்போல் கத்தினால் என்ன? ஒருபாம்பு சீறிய அளவில் ஓடிப்போமே. அழியாதும் வஞ்சனைக்கு ஆளாகாதும் வழிவழி வீரமுடையதுவே படை. எம்னே சினந்து வந்தாலும் ஒன்றுகூடி எதிர்க்கும் வீரமுடையதுவே படை. வீரம் மானம் சிறந்தநடை தெளிவு என்ற நான்கும் படைப்புக்கு வேண்டியவை. வந்த போரைத் தடுக்கும் முறையறிந்து முற்படையைச் செலுத்துவதே சேனையாம். அழித்தலும் பொறுத்தலும் இல்லை எனினும் சேனை தோற்றத்தால் சிறப்பு அடையும். இழிவும் நீங்காத மனக்கசப்பும் வறுமையும் இல்லை யென்றால் படைவெல்லும். படையில் வீரர் பலர் இருந்தாலும் நல்ல தலைவர் இல்லையெனின் பயனில்லை. 1 56 பொருள் 761 762 763 764 76.5 766 767 768 769 770 படையியல் அதிகாரம் 77 படைமாட்சி - உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வ்ெறுக்கையு ளெல்லாம் தலை. 761 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. 762 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். 763 அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை - . 764 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை 765 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. 766 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த - போர்தாங்கும் தன்மை யறிந்து. 767 அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். 768 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை 769 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். 770 157