பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் பகைத்திறம் தெரிதல் பகைக்கும் தீய குணத்தை யாரும் விளையாட்டாகவும் விரும்புதல் கூடாது. 871 வில்லுடைய வீரரைப் பகைத்துக் கொண்டாலும் சொல்லுடைய புலவரைப் பகைக்காதே. 872 தனியனாக இருந்து பலரைப் பகைப்பவன் பித்தனைக் காட்டிலும் இரங்கத்தக்கவன். 873 பகைவனையும் நண்பனாகக்கருதும் உயர்ந்தவனது பெருந்தன்மையால் உலகம் வாழ்கின்றது. 874 தனக்கோ துணையில்லை; பகையோ இரண்டு: ஒரு பகையை நல்ல துணையாக்கிக் கொள்க. 875 தெளியினும் தெளியாவிடினும் துன்பநிலையில் நம்பி விடாதே. பகைத்து விடாதே. 87.6 துன்பத்தை உணரா நண்பர்க்குச் சொல்லாதே; தன்குறைபாட்டைப் பகைவர் முன் காட்டாதே. 877 வகையாகத் தன்வலி பெருக்கிக் கொண்டால் மாற்றாரின் ஆணவம் தானே மறையும். 878 முள்ளுடைய மரத்தை முளையிலே அழிக்க: முதிர்ந்துவிடின் வெட்டுவார் கை புண்படும். 879 பகைப்பவரின் இறுமாப்பை அழிக்காதவர் பகைவர் மூச்சுவிட்டாற் போதும், அழிவர். 880 78 நட்பியல் . அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல் பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 874 வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. 872 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். 873 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874 தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875 தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். 876 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து. 877 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு 878 இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து. 879 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். 880 179