103
[க-ரை) பிறரிக்குத் தீங்கு செய்பவர்கள் தப்பாமல. கெடுவது எப்படியென்றால், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் அடியிலேயே தங்குவது போன்ற தன மையாகும்.
9. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்
துன்னற்க தீவினைப் பால்,
|ப-ரை) த ன் ைன த் தா ன் - தன்னையே தான்: காதலனாயின் - விரும்பி நேசிப்பானா கில், தீவினைப்பால் . தீவினையென்னும் தன்மையுடையவைகளுள், எனைத் தொன்றும் . எவ்வளவு சிறியதாக இருப்பது ஒன்றினைக் கூட, துன்னற்க-மற்றவர்களுக்குச் செய்யாதிருப்பானாக,
(க-ரை) ஒருவன் தன்னைத்தானே விரும்புவானா னால் சிறிதளவும் பிறனுக்குத் தீச்செயல் ஒன்றேயாயினும் செய்யாதிருப்பானாக,
10. அருங்கேடன் என்பது அறிக மருங்கு ஓடித்
தீவினை செய்யான் எனின்.
(ப-ரை) மருங்கு ஒடி - கொடுமையான வழியிலே போய், தீவினை - தீச்செயல்களை, செய்யான் . செய்யா திருப்பவன், எனின் - என்றால், (அப்படிப்பட்ட வ)ை அருங்கேடன் - கெடுதி என்பது அணுகாதவன், என்பது அறிக - என்பதனை அறிந்து கொள்ளுதல் வேண்டும்
(கரை) ஒருவன் கொடுமையான வழியிலே சென்று தீச்செயல்களைப் பிறருக்குச் செய்யாதிருப்பானானால் அவன் கெடுதி இல்லாதவன் என்பதனை அறிந்து கொள்ளு தல் வேண்டும்.