பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு முன்னுரை

திருக்குறளார்

வாழ்க்கைக்குச் சிறந்த துணையாகவும் வழிகாட்டி யாகவும் அமைந்திருப்பது திருக்குறள் எனப்படும் உலகப் பொதுமறையாகும். "எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று பெரும்புலவர்கள் போற்றியிருப்பதும் உலக மேதைகள் பலரும் பாராட்டியிருப்பதும் வெளிப்படையான உண்மைகளாகும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத கருத்துக்கள் அனைத்தும் பொதுமறைப் பு ல வ ர் திருவள்ளுவரால் தெளிவு படுத்தப்பட்டுள்ளனவாகும்.

அனைத்துக் கருத்துக்களையும் கற்றுணர்ந்து பயன் பெற்று அனைவரும் இன்புறுமாறு செய்யவேண்டியது அறிஞர்களின் கடமையாகும். இந்தச் சிறு கட்டுரையில் அனைத்தையும் எழுதுவதற்கு இயலாவிட்டாலும் அன்றாட வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்பட வேண்டிய சில குறட்பாக்களையேனும் தொட்டுக் காண்பிக்க வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கின்றது.

ஆறறிவு படைத்த மானிடப் பிறவியின் பெருஞ் சிறப்பினை நன்கு சிந்தித்து வாழவேண்டிய முறையில் வாழ்ந்து பயனுள்ள மக்களாகப் புகழேந்தி வாழவேண்டும். மனிதப் பிறவிக்கு மிகச் சிறந்த புகழினைத் தருவது ஈகைக் குணமாகும். இயன்ற அளவு அக்குணம் இல்லையென்றால் மனிதப்பிறவி என்று சொல்லுகின்ற பெயருக்குப் பொருளில் .லாமல் போய்விடும். உடம்பைச் சுமந்து கொண்டிருக்கும்