பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix

இந்த நூலினை, தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பக. மான வானதி பதிப்பகம் வெளியிடுகிறது. வானதி அதிபர் அண்ணன் வானதி திருநாவுக்கரசு அவர்கள் பொருட் செலவைப் பாராமல் தரமான தயாரிப்பாகப் புத்தகங் களைத் தயாரிப்பவர். அந்த வகையில் இந்தப் புத்தகமும் அணிசேர் வகையில் வெளிவருகிறது.

தமிழகம் இதுவரை படைத்திராத திருக்குறள் விளக்க நூலினை உலகப் பொதுமறை' என்ற பெயரில் வெளி யிட்டு, அரசுப் பரிசாக இரண்டாயிரம் ரூபாய் பெற்றார்.

தமிழக வரலாற்றில் :: உலகப் பொதுமறை' அரியவற்று ளெல்லாம் அரிய நூலாகும்,

மேலும் அவருடைய தொண்டினைப் பாராட்டி, தமிழக அரசு திரு. வி. க. விருதினை அளித்து, பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், கலைமாமணி பட்டமும் பதக்கமும் தந்து பாராட்டிப் பெருமைப்படுத்தியுள்ளது.

வாழ்க்கையினையே திருக்குறளுக்குத் தொண்டு செய்யு மளவுக்கு வாழ்ந்து வரும் அப்யா திருக்குறளாரின் தொண்டு பார் சிறக்கப் போற்றப்படும். இன்னும் பல பரிசுகள் அளித்துப் பாராட்டப்படும்.

வாழ்க திருக்குறளார்!