பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vjii

அழகிய தமிழால்-சிரிப்பால்-சிந்தனையால்-இந்நாட்டு மக்களுக்குத் திருக்குறளார். அவர்கள் சீரிய சிந்தனைகளின் வாயிலாகப் பரப்பி வருகிறார்கள். அரை நூற்றாண்டுக்

காலமாக அவர்கள் ஆற்றிவரும் பணி சாதாரணமானதல்ல.

திருக்குறளார் நினைத்திருந்தால் - அவர் படிப்புக் கொப்ப திருக்குறளிலேயே வாதாடி, வாதத்திறமையால் வழக்கு வல்லுனராகியிருக்கலாம். நாடாளுமன்றத்தில் பணியாற்றிய போதும், அவர் மக்களுக்காகப் பிரச்சினை களை, திருக்குறள் நெறியிலேயே எடுத்து வைத்துச் சிந்திக்க வைத்தார். அவர் மட்டும் நினைத்திருந்தால் அரசியல் வானில் ஒளி மிளிரும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால், அரசியல் சிந்தனையைவிடத் திருக்குறள் சிந்தனையே அவர் உள்ளத்தில் மேம்பட்டு நிமிர்ந்தது. அவர் நிமிரிவால் இந்தத் தமிழக மக்கள், தங்களையும், தங்கள் மூதாதையர்களையும் எண்ணிப் பார்த்தனர்.

தந்தை பெரியார் போன்ற பெரியார்களின் பேரன்பைப் பெற்றவர். குறள்வழி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர். வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறி .பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டவர். ஏ, மனிதா! நீ சிந்திக்கத் தெரிந்தவன்! உலகிலுள்ள உயிர் வகைகளில் உனக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும்" என்று அறைகூவல் விட்டுக்கொண்டு வருபவர். அந்தப் பெருமகனைத் தமிழ் மக்கள் நன்றியோடும் பெருமிதத்தோடும் திருக்குறளார்’ என்று பாசமுடன் அழைத்துப் பூரிக்கின்றனர்.

திருக்குறளுக்குப் பலரும் உரை எழுதியிருந்தாலும், திருக்குறளாரின் எளிய உரை இதுவரை பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அதுமட்டும் போதா தென்று, இப்போது, திருக்குறள் தெளிவுரை-பதவுரைப் பதிப்பு' என்று எழுதி, தமிழ் மக்களுக்கு வழங்குகிறார்.