பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

(க-ரை) கடுமையான சொல்லும் குற்றத்திற்கு மேம் பட்ட தண்டனையும் ஆன இரண்டும் அரசனது வெல்லுதற். கேற்ற மாறுபாடு என்னும் இரும்பினைத் தேய்ச்கின்ற அரமாகும். -

8. இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு. - 368

(ப-ரை) இனத்து - தனது இனமாகிய அமைச்சர் களுடன், ஆற்றி - பொருந்த அமைந்து, எண்ணாத . கலந்து எண்ணிச் செய்யாத, வேந்தன் - வேந்தன் (தனது செயல் பழுது பட்டபோது சினத்தாற்றி - தன்னை சின் மாகிய குற்றத்திலே செலுத்தி, சீறின் - அவர்களைச் சினந்து கொண்டால், திரு.அவனுடைய செல்வம், சிறுகும். நாள்தோறும் சுருங்கும்.

(க-ரை) தன் அமைச்சர்களோடு தானும் சிந்தனை செய்து செயல்படாத வேந்தன், அக்குற்றத்தினால் தமது செயல் பழுதுபட்டபோது பிறர்மேல் கோபம் கொள்ளுவா னாகில், அவனுடைய செல்வம் நாள்தோறும் சுருங்கும்.

9. செருவந்த போழ்தின் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும். - 569

(ப-ரை) சிறை - முன்னரே, அரண் - அரண், செய்யா. செய்து கொள்ளாத, வேந்தன் - வேந்தனாவான், செரு. வந்த பகை (போர்) வந்த போழ்து . காலத்தில், வெரு வந்து - பாதுகாப்பு இல்லாததால் பயந்து, வெய்துகெடும் . விரைவில் கெடுவான்.

(க-ரை பகைவர் வருவதற்கு முன்பாகவே தனக்குப் புகலிடமானதோர் அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில்,பாதுகாப்பு இல்லாததால் விரைவில் கெடுவான்.