338
8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. 788
(ப-ரை) உடுக்கை - உடை, இழந்தவன் - குலைந்த ஒருவனுக்கு, கைபோல - உடனே கைசென்று உதவுதல் போல, ஆங்கே - நண்பனுக்குத் தன்பம் வந்த அப்போதே, இடுக்கண் - அத் துன்பத்திணை, களைவதாம் நீக்கி விடுவது தான், நட்பு நட்பாகும்.
(க-ரை) ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி செய்து இழிவினை நீக்குவதுபோல தண்பனுக்குத் துன்பம் வந்தபோது அப்பொழுது சென்று உதவிசெய்து அதனை நீக்குவதே நட்பாகும். 4
9. கட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்புஇன்றி ஒல்லும்வாய் ஊன்றும் கிலை. 789 (ப-ரை நட்பிற்கு - நட்பு என்பதற்கு, வீற்றிருக்கை இருக்கும் இடம் என்பது, யாது - எது, எனின் - என்றால், கொட்பு - திரிதல் (மாறுதல்) இன்றி - இல்லாமல், எப்போதும்) ஒல்லும் - முடியும், வாய் இடங்களில் எல்லாம், ஊன்றும் - தளர்ச்சியின்றி உதவும், நிலை . மனவலிமையாகும்.
|க-ரை நட்பானது சிறப்பாக வீற்றிருக்கும் இடம் எதுவென்றால் அது எப்போதும் மாறுபாடு இல்லாமல் முடிந்த இடங்களில் எல்லாம் தளராமையினைத் தாங்கும் திண்மையாகும்.
10. இனையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. 790
(ப-ரை) இவர் . இந்த நண்பர், எமக்கு - எனக்கு. இனையர் - இப்படிப்பட்ட நண்பர், யாம் . யாம், இன்னம் , இத்தகைய அன்புடையோம், என்று - என்பதாக் கூறி, புனையினும்.ஒருவரை யொருவர் சிறப்பித்துப் பேசினாலும்