பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

கொண்டு, தன் காப்ப - தன்னைக் காத்துக் கொண்டால், பகைவர்கண் . தனது பகைவரிடத்தில், பட்ட செருக்கு - க.ண்டான செருக்கு, மாயும் . அழிந்து விடும்.

(கரை) தான் தொழில் செய்யும் வகையினை அறிந்து அது முடித்தற்கேற்றபடி தன்னைப் பெருக்கிக் காத்துக் கொண்டால் தனது பகைவரிடத்தில் உள்ள செருக்கு கெட்டுவிடும்.

8. இளைதாக முள்மரங் கொல்க களையுகர்

கைகொல்லும் காழ்த்த இடத்து. 879

|ப-ரை முள் - முள்ளாகிய, மரம் . மரத்தினை, இளை தாக - இளையதாக இருக்கும் போதே, கொல்க களைதல் வேண்டும், காழ்த்தவிடத்து - முதிர்ந்து விட்டபோது, களையுநர் - களைபவருடைய, கை கொல்லும் - கையி னைக் கெடுக்கும்.

(க-ரை) களைய வேண்டிய முள் மரத்தினை இளைய தாக இருக்கும் போதே களைந்து விடுதல் வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் முதிர்ந்தபோது களைபவர்கள் கையினை அது தானே கெடுக்கும்.

10. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார். 880 (ப-ரை செயிர்ப்பவர் . தம்முடன் பகைக்கும் பகை வருடைய, செம்மல் - தருக்கினை, அழிக்கும் நிலையில் இருந்தும்; சிதைக்கலாதார் . இகழ்ச்சியால் அழிக்காத வேந்தர், உயிர்ப்ப . மூச்சு விடுகின்ற அளவிற்கும், மன்ற . உறுதியாக, உளர் . இருப்பவர், அல்லர் . அல்லரி என்பதாகும். -

(க-ரை தம்முடன் பகைப்பவரது தருக்கினைக் கெடுக்கக் கூடியவராய் இருந்து, இகழ்ச்சியால் அது செய்யாத அரசர், பிறகு மூச்சு விடும் அளவிற்கும் உயிருடன் இருப்பவராக மாட்டார்.