பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

481

பொறுத்திருக்கும் பெண் பிறப்புப்போல மிக்க சிறப்புடைய பிறப்பு வேறு எதுவும் இல்லை.

8. கிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம்

மறைஇறந்து மன்று படும். 1138 (ப-ரை) நிறை - நிறை குணத்தினால், அரியர் - அருமையானவர், மன் அளியர் - மிகுந்த அன்பு காட்டத் தக்கவர், என்னாது - என்று இரக்கம் கொள்ளாமல், காமம் மாதர்களுடைய காமம், மறை - அவர்கள் மறைத் திருப்பதை, இறந்து . கடந்து, மன்று . பிறர் அறியுமாறு மன்றத்தில், படும் . வெளிப்பட்டுவிடும்.

(க-ரை! இவர் நிறை குணத்தினால் நாம் செல் வதற்கு அருமையானவர்" என்று அஞ்சுதல் செய்யாமல் அன்பு காட்டத் தக்கவர் என்று இரக்கமும் கொள்ளாமல் மகளிர் காமம் அவர் மறைத்து வைத்திருப்பதையும் கடந்து பலர் அறிய மன்றத்தில் வெளிப்பட்டு விடுகின்றது.

9. அறிகிலார் எல்லோரும் என்றே.என் காமம்

மறுகின் மறுகும் மருண்டு. 1139 tu.ரை எல்லாரும் . எல்லா மக்களும், அறிகிலார் . அறிந்து கொள்ளவில்லை, என்றே - என்று கருதி, என் . என்னுடைய, காமம் - காமம், மறுகில் - இந்த ஊரின் தெருக்களில், மருண்டு மறுகும் . மயங்கிச் சுழன்று கொண் டிருக்கின்றது.

|கடரை) யான் முன்பு அடங்கி இருந்ததனால் எல்லாரும் என்னை அறியவில்லை'. இனி அவ்வாறின்றி யானே வெளிப்பட்டு அறிவிப்பேன், என்று கருதி என் காமம் இவ்வூரி வீதியின் கண்ணே மயங்கிச் சுழல்கின்றது.

10. பாம்கண்ணிற் காண ககுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா வாறு. 1140

(ப-ரை யாம் . யாம், பட்ட அடைந்த காம நோய் களை, தாம் . அவர்களும், படாவாறு . அடைந்து

தி. தெ.-31