123. பொழுது கண்டு இரங்கல்
(மாலைப் பொழுது வந்த போது தலைமகள்
இரந்து வருந்தல்)
1. மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலைt வாழி பொழுது. 122 i
(ப.ரை) பொழுது-மாலைப் பொழுதே! நீ மாலையோ. நீ முன்னாளில் வந்த மாலைப் பொழுதோ, அல்லை . அல்ல, மணந்தார் . காதலரை மணந்த பெண்களது, உயிர் - உயிரை, உண்ணும் . உண்ணுகின்ற, வேலை . இறுதிக்காலமாக இருக்கின்றாய், வாழி . நீ வாழ்வாயாக!
(கரை) மாலைப் பொழுதே நீ முந்தைய நாட்களில் வந்த மாலைப்பொழுது . அல்ல; அந்த நாளில் காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் முடிவுக் காலமாய், இப்போது இருக்கின்றாய்.
2. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோகின் துணை. 1222
(ப-ரை) மருள் . மயங்கிய, மாலை மாலைப் பொழுதே, புன்கண்ணை ஒளியிழந்து இருக்கின்றாய். வாழி - வாழ்க! நின் - உனது, துணை துணையும், எம் . எம்முடைய, கேள்போல் . துணைவரைப் போல, வன் ன்ெனதோ - அன்பின்றிக் கொடுமையான தன்மை புடையதோ?
": க.ரை) மயங்கிய மாலைப் பொழுதே! நீயும் எம்மைப்போல ஒளியிழந்த சுண்களையுடையதாக இருக் கின்றாய்; உன் துணையும் எம்முடைய துணையே போல் வன்கன்மையுடையதோ? இரக்கமற்றதோ?