பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 இன்பம் 126 நிறையழிதல் காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நானுத்தாழ் வீழ்த்த கதவு. 1251 காம மெனஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். 1252 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். 1253 நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும். 1254 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. 1255 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். 1256 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். 1257 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை - 1258 புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு. 1259 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்துடி நிற்பேம் எனல். 126O