90
5. கள்ளாமை
(இ-ள்) களவின் கண்ணே மிக்க ஆசையையுடையவர் நெறி வின் கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார், (எ-று).
இது, நேர் செய்ய மாட்டாரென்றது. 8
289. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறியார் நெஞ்சிற் கரவு.
(இ-ள்) நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்; களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சமும், (எ-று).
இது களவு காண்பாரைத் தவிர்த்தல் முடியாதென்றது. 9
290 களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணரில்.
(இ-ள்) களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெரு மையைப் பொருந்தினார் மாட்டு இல்லை, (எ-று).
இது, நேரறிந்தவர் களவு காணாரென்றது. 10
6. வாய்மை
வாய்மையாவது பொய் சொல்லாமை. பொய் கூறுதல் காம
மும் பொருளும் பற்ற வருதலானும் மறைத்துச் சொல்லுதலானும் அவற்றின் பிற்கூறப்பட்டது.
291. தன் ைெ சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன் ைெ குசே தன்னைச் சுடும்.
( இ-ள் தன்னெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக; பொய்ப்பனாயின் தன்னெஞ்சுதானே தன்னை யொறுக்கும், (எறு).