265
4. பகை மாட்சி
888. அஞ்சு மறியா னமைவில னிகலான்
றஞ்ச மெளியன் பகைக்கு.
(இ-ள்) அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவன் வலிமை அறியன், அமதியிலன், ஈயமாட்டான்; இப் பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன், (எ-று).
இஃது, இவை நான்கு முடையவன் தோற்குமென்றது. &
869. நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கனும் யார்க்கு மெளிது.
(இ-ள்) வெகுளியின் நின்று நீங்கானாய், நிறையுடைமை யிலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது. (எ-று).
இஃது, இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந்தோற்கு
மென்றது. 9
870. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.
( இ-ள்) ஒருவினை செய்யக் தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான். அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது ஆம். (எ-று).
இவன் பகைமையால், பகைவர்க்கு இனிமை உண்டாகு மென்றது. இவை ஐந்தினாலும் தான் திருந்த வேண்டும் என்று கூறப்பட்டது. I go