பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௭௨

முன்னுரை 


6. தன் கணவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும், இழிந்த நடத்தையுடையவனாக இருந்தாலும், விபச்சாரிகளுடன் உறவு கொண்டவனெனினும் அவனே அவளுக்குத் தெய்வம் (5-154)

7. 'பெண்களுக்கு யாகம், உபவாசம், விரதம் இவை எல்லாம் கிடையாது.கணவனுக்குத் தொண்டு செய்வதே அவளுக்குச் சொர்க்கம்' (5-155)

8. விதவைகள் சொற்ப ஆகாரமே காய், கனி, கிழங்கு ஆகிய புல்லுணவே உண்ண வேண்டும். மாமிசம் உண்ணக் கூடாது', - (5-157)

9. காம உணர்வால் பெண்கள் தம் கணவரலல்லாத பிறர் பெயர் களைச் சொல்லக் கூடாது. - (5-158)

10.'பிள்ளை இல்லை' என்று ஒரு மனைவி வருந்தக் கூடாது. (-159-161)

11. விதவைகளுக்கு மறுமணம் இல்லை (5-162) மறுமணம் செய்துகொள்ளாதவளே கற்புடையவள்.

12. பெண் விபசாரம் செய்யக் கூடாது: (5-163-165)

13. மனைவியை இழந்தவன் வேறு மணம் செய்து கொள்ள வேண்டும் (5-167-169)

14. பெண்களை வைத்துக்கொண்டு அரசன் மந்திராலலோசனை செய்யக் கூடாது. (7-150)

 பிராமணர்களுக்கே பிரம்மச்சாரியம், கிருகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் - ஆகிய ஆஸ்ரம ஒழுக்கங்கள் உண்டு - மனு 6-97

போகத்தை விரும்பும் ஒரு கன்னிப் பெண்ணைப் புணர்ந்தால் குற்றமில்லை. (ஆனால் அதிலும் வர்ணாச்சிரம வேறுபாடுகளுக்கு உரிய முறை உண்டு) - மனு 8-364-366

பிராமணப் பெண்களை விரும்பும் பிற சாதியார்க்குத் தண்டனைகளும் வர்ணாச்சிரம முறைப்படி தரவேண்டும். - மனு 8-375,378

பெண்கள் பருவம் எய்தும் முன்னரே மணம் செய்து கொடுத்து விட வேண்டும்