196 அ-2-11 பிறனில் விழையாமை 15
கசரு. எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. - 145
பொருள் கோள் முறை :
எளிது என இல் இறப்பான் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும்
பொழிப்புரை : யாதோ ஒரு காரணமாய்ப் பிறன் துணைவியின் தொடர்பு எளிதாகக் கிடைத்தது என்று கருதி, அவன் இல்லத்தே சென்று, அளவு கடந்து ஈடுபடுவான், எக்காலத்தும் அழியாமல் நிற்கும் பழியினை எய்துவான்.
1. எளிது என இல்இறப்பான் - யாதோ ஒரு காரணமாய்ப் பிறன் துணைவியின் தொடர்பு எளிதாகக் கிடைத்தது என்று கருதி, அவன் இல்லத்தே சென்று அளவுகடந்து ஈடுபடுவான்.
- காரணம் இருபுறத்ததாகவும் இருக்கலாம்.
அது, செல்வம், பதவி, அதிகாரம், அழகு, கணவனது உடற்குறை
முதலியவற்றுள் யாதோ ஒன்றோ சிலவோ இருந்து, பிறன் மனைவியது தொடர்பு எளிதாகலாம்.
- இல்இறத்தல் - பிறனது இல்லத்தின் கண்ணே சென்று அளவு கடத்தல்,
இறத்தல் அளவு கடத்தல், . -
‘ஏதிலான் தாரம் நம்பி எளிதென இறந்து - சிவக: 2769.
2. எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழிஎய்தும் எக்காலத்தும் அழியாமல்
நிற்கும் பழியினை எய்துவான்.
விளியாது அழியாது.
பழி பிறரால் பழித்துக் கூறப்பெறும் செயல்.
- பழி இருகுடும்பத்தும், மக்களையெல்லாம் முன்வைத்துக் கூறப் பெறும்
ஆகலான் எக்காலத்தும் அழியாது நிற்கும் என்றார்.
3. முன்குறளில் எனைத்துணையராயினும் என்றதால், இவ் விழிவொழுக்கம் எளிதானது கூறப்பெற, அதனையடுத்து இது நின்றது.