திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
257
திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 257
போலவே அனைவர்க்கும் இருப்பின் அதுவும் சிறப்பின்றாம். . எனவே, ஒருவர் சிறப்புப் பிறரினின்று வேறுபட்டுத்தனிச் சிறப்பாக
இருப்பின் அதுவே பெருமைக்குரியது. . அத்தகைய வாழ்க்கைச் சிறப்பு உடையவரே வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த (50) புகழ்ச்சிக்கு உரியவர். பிறர் அனைவரும் இகழ்ச்சிக்கு உரியவரே ஆவர், என்பது ஆசிரியர் கருத்து. 3) வசை என்ப: இகழ்ச்சியே ஆகும் என்பர் சான்றோர். வசை தாழ்ச்சி, இகழ்வு, பழிப்பு, குற்றம் முதலிய பொருள்களைக்
குறிக்கும். . இகழ்ச்சி இகழ்தற்குரியது.
செய்தற்கரிய அனைத்து வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் மக்கள் பிறவி உற்றும், பெருமைக்குரிய ஓர் அருஞ்செயலையும் செய்யாது விணே உண்டு, உடுத்து, உயிர்த்து களித்து மறைந்து போதல் இழிவும் இகழ்ச்சிக் குரியதுமாகும் என்றார். என்னை?
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்’ - 26 ‘அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் - புறத்த புகழும் இல’ - 39 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்’ . - 335 ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ - 505 ‘அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி’ - 6 18 ‘என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை - 652 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு . . . . அஃதிறந்து வாழ்தும் எனல்’ - - 971
‘பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின் ... x
அருமை உடைய செயல் . - - 975
எச்சமென்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன் -1004 - என்பார் ஆசிரியர் ஆகலின்,