பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய சேர சிங்களர்.

17


பூசி பல திருப்பணிகள் செய்தான். வேறு மூன்று பாண்டியக் கோமான்கள் — மாரவர்மகுலசேகரன் 1, ஜடாவர்ம சுந்தர பாண்டியன் II, மாரவர்ம குலசேகரன் II - திருச்சினாப்பள்ளியிலிருந்ததாகவும் சாஸனங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் பாண்டிய ஹாய்ஸால நாடுகளின் எல்லைகளைத் தீர்மானிக்கவாவது சோழர்களின் அதிகாரம் எம்மட்டுமிருந்ததென்றறியவாவது ஹேதுக்களொன்றுமில்லை.

சோழபாண்டியர் ஒருவருக்கொருவருடன் கடும்போர் புரிந்தனர். ராஜராஜச் சோழன் I (907-935) பாண்டியர் நாட்டைத் தன்னுடையதாக்கிக்கொண்டான். அதற்கு ராஜராஜப் பாண்டியநாடு என்றும் அதன் தலைநகருக்கு சோழேந்திரஸிம்ஹ சதுர்வேதிமங்கலம் என்றும் பெயரிட்டான். ராஜேந்திரச்சோழன் I (936-966) பாண்டிய நாட்டில் 'சோழபாண்டியர்' என்ற பெயருடன் ஒரு புதிய வம்சத்தாரை அரசாக்ஷி செய்ய நியமித்தான். ராஜாதி ராஜச்சோழன் I (967-975) காலத்தில் கலகம் செய்த பாண்டியர் தோற்கடிக்கப்பட்டனர். வீரராஜேந்திரச் சோழன் (987-990) ஆக்ஷிபுரியும்போதும் கலகம் செய்த பாண்டியர் தோற்கடிக்கப்பட்டு அவர் மன்னனும் இறந்தான். குலோத்துங்கச் சோழன் I (993-1040) காலத்திலும் 995-ல் பாண்டியர் கலகம் செய்தனர். சோழமன்னனோ அவர் நாட்டை ஜயித்து திருவாங்கூர் எல்லையில் கோட்டாற்றின் சமீபம்வரை சென்று அங்கே ஒரு ஸேனையை பாதுகாப்பிற்காக ஸ்தாபித்து விட்டு வந்தான். 'சோழ பாண்டியர்' என்பவர் 1057 வரையில் சோழருக்குக் கீழ் சிற்றரசராயிருந்து, பிறகு இருந்த இடம் தெரியாமல் மறைந்திருக்கவேண்டும். பாண்டியரும் அக்காலத்துக்குப்பிறகு சோழராதீனத்தை மீறி ஸ்வாதந்திரியமடைந்திருப்பார்கள் போலிருக்கிறது.

திரு

5