பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


ஏறக்குறைய 9-ம் நூற்றாண்டு முதல் ஸிங்களர் சோழருடன் யுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கவேண்டும். பரந்தகன் I (828-868) அவர்களைத் தோற்கடித்தான். ராஜராஜன் 1(907-935) லங்கைத்தீவு முழுமையும் தன்னுடையதாக்கிக்கொண்டான். அவனால் ஏற்படுத்தப்பட்டச் சோழ வம்சத்தவர் குலோத்துங்கன் I (993-1040) காலம் வரையில் அத்தீவில் ஆக்ஷி செலுத்தினர். பிற்பாடு சிங்களர் கலகம் செய்து சோழரைத் துறத்திவிட்டார்கள். ராஜாதி ராஜன் I (967-975) காலத்திலும் அவர் செய்த கலகம் அடக்கப்பட்டது. ராஜாதிராஜன் II (1094-1100)-ம் குலோத்துங்கன் III (1101-1151)-ம் அவருடன் கடும் போர்புரிந்தபோதிலும் பின் வந்த சோழமன்னரொருவராவது லங்கைத் தீவில் ராஜ்யம் ஸம்பாதித்ததாக தோன்றவில்லை.

ராஜேந்திரன் I (936-966) பர்மாவுக்கு ஸைந்யத்தையனுப்பி அந்நாட்டையும் மலேயா தீவுகளையும் கைப்பற்றினான். ஆனால் அவ்விடங்களில் சோழர் ஆக்ஷி எப்படி குன்றிற்று என்பது புலப்படவில்லை.

பாண்டியரைப்போலவே சேரரும் அடிக்கடி சோழருடன் சண்டைகள் செய்தனர். கரிகாலச்சோழனும் அவன் குமாரன் நலன்கிள்ளியும் அவரை அடிக்கடி எதிர்த்து தோற்கடித்தனர். ராஜராஜன் I (907-935) சேர நாட்டுத் துறைமுகமொன்றைப் பிடித்தழித்தான். ராஜாதி ராஜன் I (967-975)-ம் வீரராஜேந்திர (987-990) - னும் அவருடன் யுத்தம் பண்ணி வெற்றி பெற்றார்கள். குலோத்துங்கன் I (993-1040) சேரர் கலகத்தையடக்கி அவர் ஊர் ஓரம் கோட்டாற்றில் ஒரு ஸைன்யத்தையும் ஸ்தாபித்தான். 13-ம் நூற்றாண்டில் (1235) ரவிவர்மச்சேரன் ஸ்ரீரங்கத்திற்கும் காஞ்சீபுரத்திற்கும் சென்றான்.