சோழநாடு 33 அத்தரர் தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை மாற்றம்.உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்திரே! நீற்றர், ஏற்றர், நீல கண்டர் திறைபுனல் நீள்சடைமேல் ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்பது அடைவோமே. 25. திருமணஞ்சேரி (கிழைத்திருமணஞ்சேரி) அருள்வள்ளல்நாதர்-யாழின்மென்மொழி சம்பந்தர் : அப்பர் : ! வழிபட்ட நான் ; 10-1-57; 13-10-65 எதிர்கொள்பாடிக்குக் கிழக்கே % மைல் அளவில் இத் தலம் இருக்கிறது. வணிககுலத்துப் பிறந்த ஆமை மனித உருப்பெற்று முறைப் பெண்ணை மணந்த தலமென்ப. சம்பந்தர் மொழியானை, முன்ஒரு நான்மறை ஆறுஅங்கம் பழியாமைப் பண்இசை யான பகர்வானை. வழியானை, வானவர் ஏத்து மணஞ்சேரி இழியாமை ஏத்தவல் லார்க்குளய்தும் இன்பமே. அப்பர் துள்ளு மான்மறி துரமழு வானினர் வெள்ள நீர்கரந் தார்.சடை மேலவர் அள்ள லார்வயல் சூழ்மணம் சேரிஎம் வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வாவதே, 26. திருக்குறுக்கை வீரட்டேசுரர்-ஞானாம்பினை அப்பர் :: வழிபட்ட நாள் : 12-7-57; 20-10-65 நீடுர் இரயில் நிலையத்தில் இருந்து மேற்கே 3 கல் அளவில் உள்ள அன்னியூரைத் தாண்டி வடமேற்கே 4