பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னே மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்ருற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலே மலங்கப் புலனேந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தே ைரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்ருனே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்ருப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த் தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண் ணியனே காக்குளம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய், மாற்றமாம் வையகத் தி வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனேயுள்