திருப்பாவை 43
இப்பாடல் ஒலிகளை மட்டும் குறிப்பிடுவதாக அமைவது தனிச்சிறப்பு ஆகும். கரிக்குருவியின் பேச்சொலி, தயிர்கடை யும் வீச்சொலி, பக்தர்களின் பாட்டொலி இவை பள்ளி எழுச்சி ஒலிகளாக அமைந்துள்ளன.
8: கீழ்வானம் வெளுத்தது (இறையருள்)
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல்
காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மா வாய்பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாங்
பதவுரை
கீழ்வானம் வெள்ளென்று-கிழக்கு வானம் வெளுத்து
விட்டது என்று எருமை சீறுவீடு-எருமைகள், சிறிது விடுதலை பெற்றுக்
காலார நடந்து மேய்வான் பரந்தனகாண்-மேய்வதற்குப் பரவிச் சென்
றுள்ளன. மிக்கு உள்ள பிள்ளைகளும்-போகாமல் எஞ்சி உள்ள
சிறுமியரும் போவான்போகின்றாரை-போவதற்காகப் புறப்படு
கின்றவர்களையும் போகாமல் காத்து-போகாமல் தடுத்து நிறுத்தி