திருப்பாவை 45
மேய்வான்-வினையெச்சம்; மேய; பரந்தனகாண்-பரவிச் சென்று பால் கறப்பதற்கு முன் அவை கால்ஆறுவதற்காக வெளியே அவிழ்த்து விடுதல் வழக்கம் என்று தெரிகிறது; போவான்-வான் ஈற்று வினையெச்சம்: போக. போகின்றார்-வினையாலணையும் பெயர். காத்து-தடுத்து. கூவுவான்-கூவ என்னும் பொருள்தரும் வான் ஈற்று வாய் பாட்டு வினையெச்சம்.
கோதுகலம்-குதூகலம் என்ற வட சொல்லின் தமிழ் ஆக்கம். பறை-இங்குப் பரிசில் என்ற பொருளில் வந்தது. பெறு
கின்ற பரிசு பறையாகிறது.
மா வாய்பிளந்தவன்-மாவினது வாய்; கேசிகன் என்ற அரக் கன் குதிரை வடிவில் வந்து கண்ணனை மோத வந்தான். அவனைக் கொன்று முடித்தான் என்பதாம். மல்லர்-மற்போர் செய்வோர். மோதுபோர் செய்பவர்;
துரியன் சபையில் நிகழ்ந்த நிகழ்ச்சி. மாட்டிய-மாளச் செய்த; ஆவா-ஆகா வியப்பிடைச் சொல். அருள்-செய்து அருள்க.
இவ்வளவும் கூறிவிட்டோம்; இனி நீ எது தக்கது என்
பதை ஆராய்து கொள்க என்பதாம்.
9. தூ மணி மாடத்து
(நாமம் நவில்வோம் எனல்)
து.ாமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய துாபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்