48 ராசி
10. நோற்றுச் சுவர்க்கம்
(கதவு திறக்க) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு
ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ? ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
பதவுரை
நோற்று-சென்ற பிறவியில் நோன்புகள் செய்து
சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்-அதன் பயனாய் இந்தப்
பிறவியில் சுவர்க்க சுகம் பெறும் அம்மையே! மாற்றமும் தாராரோ-பதில் யாரும் கூறமாட்டீர்களோ? வாசல் திறவாதார். வாசற் கதவையும் திறக்கமாட்டீர். நாற்றத் துழாய் முடி --மணம் வீசும் துசாப மாலையை
முடியில் சூடிய நாராயணன் நம்மால் போற்ற- நாராயணன் நம்மால் துதிக்கப் பெற பறை தரும்-பரிசு தருவான்; புண்ணியன் (ஆல்)-நன்மை செய்பவன் ஆவான்; பண்டு ஒருநாள்- இராமவதாரத்தில் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பககுணனும்-எமன்
வாயில் விழுந்த கும்பகருணனும்