64 ராசி
16 நாயகனாய் கின்ற (வாயிலோனை விளித்தல்)
நாயகனாய் நின்ற நந்தகோ பனுடைய கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய, ஆயர் சிறுமிய ரோமுக்கு அறையறை மாயன் மணிவண்ணன் நென்னலே
வாய்நேர்ந்தான்; துரயோமாய் வந்தோம்! துயிலெழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்,
பதவுரை
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய-தலைவனாக இருக்கும் நந்தகோபனின்.
கோயில் காப்பானே-அரண்மனையைக் காவல் செய்
பவனே.
கொடித் தோன்றும் தோரணவாயில் காப்பானே-- கொடிகளும், தோரணமும் தோன்றும் வாயிலைக் காப் பவனே!
மணிக்கதவம் தாள் திறவாய்-மணிகள் பொருந்திய நெடுங்கதவின் தாளைத் திறப்பாயாக!
ஆயர் சிறிமியரோமுக்கு-ஆயர் சிறுமியர் ஆகிய எமக்கு
அறை பறை-ஒலிக்கும் பறையை
மாயன் மணிவண்ணன்-கண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான்-நெருநலே (நேற்றே) தருவதாக இசைவு தந்தான்.