திருப்பாவை 79
23. மாரிமலை முழைஞ்சில் (அருள் செய்க) மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்து தறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலலே நீ பூவைப்பூ வண்ணா உன் கோயில் நின் றிங்ங்னே போநதருளிக் கோப்புடை சிரிய சிங்கா சனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
மாரி மலைமுழைஞ்சில்-மழைக்காலத்தில் மலைக் குகையில் மன்னிக்கிடந்து உறங்கும்-நிலைபெற்றுப் படுத்து உறங்கும் சீரிய சிங்கம்-சிறப்புமிக்க ஆண் சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து-துயில் எழுந்து கோபித்துப் பார்த்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி-மெய்ம் மயிர் சிலிர்க்க எழுந்து நான்கு திசையும் பெயர்ந்து எழுந்து சென்று
மூரி நிமிர்ந்து- மூர்க்கத்தனமாக நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போல--பேரொலி செய்து புறப்பட்டு வெளி வருவது போல
நீ பூவைப்பூ வண்ணா - காயம்பூ போன்ற நிறுத்தினை உடையவனே நீ!
உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி-கோயிலை விட்டு இங்கு வந்து அருளி,