திருப்பாவை 97
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற் றின்புறுவ ரெம்பாவாய்
பதவுரை
வங்கக்கடல் கடைந்த மாதவனை-திருப்பாற் கடலைக் கடைந்து அமுதம் தந்த மாதவனை (மிக்க தவப்பேறு உடையவனை) ,
கேசவனை-அழகிய திருமுடி உடையவனை;
திங்கள் திருமுகத்துச் சேயிழையார்-மதி போன்ற முகத்தை உடைய செல்வ மகளிர்
சென்று இறைஞ்சி-சென்று வணங்கி; அங்கு அப்பறை கொண்ட ஆற்றை-அங்கு அந்தப்
பறையைக் கொண்ட நெறி முறையை,
அணிபுதுவைப் பட்டர்பிரான் கோதை சொன்ன-அழகிய புதுவை என்னும் ஊரில் வாழும் விட்டுசித்தர் என்னும் பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும்-தூய செந்தமிழ்ப் பாடல்கள் முப்பதினையும்
தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார்-தவறாமல் இங்கு இவ்வகையில் உரைப்பவர்
ஈரிரண்டுமால் வரைத் தோள்-மலை போன்ற நான்கு. பெரிய தோள்களை உடைய
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்-அழகிய கண்களை உடைய திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்-எல்லா இடத்தும் திருவருள் பெற்ற இன்பமடைவர்