பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 & திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவரை

அதிபல வச்ர வாகுவும்

அயினுனை வெற்றி வேலதும் அரவுயி டித்த தோகையும் உலகேழும்

அதிரவ ரற்று கோழியும்

அடியர்வ ழுத்தி வாழ்வுறும் - அபிநவ பத்ம பாதமும் மறவேனே,

இரவிகு லத் இராசதம்

மருவியெ திர்த்து வீழ்கடு இரணமுக சுத்த வீரிய குணமான

இளையவ னுக்கு நீண்முடி

அரசது பெற்று வாழ்வுற . r இதமொடு அளித்த ராகவன் மருகோனே!

பதினொரு ருத்தி ராதிகள்

தபனம்வி ளங்கு மாளிகை - பரிவொடு நிற்க மீசுர! . சுரலோக

பரிமள கற்ப காடவி

வரியளி சுற்று பூவுதிர் பழநிம லைக்குள் மேவிய பெருமாளே!

செங்கதிர் மரபில் உரிய இராசத குணத்தைப் பொருந்தி எதிர்த்து, பகைவர்களை எதிர்த்து விரும்பத் தகுந்த கடுமையான போர் முனையில், தூய வீர குணத்தைக் கொண்ட, தம்பியாகிய பரதாழ்வானுக்கு புகழ் மிகுந்த முடியையும், அரசாட்சியையும் பெற்று வாழும் பொருட்டு பிரியத்தோடு தந்த இராமருடைய மருகனே! பதினொரு உருத்திரர்களது. ஒளி விளங்கும் கோவிலில், பிரியத்தோடு நின்றருளிச் செய்யும் ஈச்சுரனே தேவரின் உலகத்தில் மிகுந்த நறுமணங் கொண்ட கற்பகச்