பக்கம்:திருப்புமுனை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


வந்து சொல்றேன்டா. இன்னிக்குச் சாயந்தரம் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலே இருக்கிற மரத்தடியில் சந்திக்கலாம்'டா' கூறிக் கொண்டே விரைந்து நடந்தான், நண்பர்களும் நம்பிக்கை யோடு கலைந்து சென்றார்கள்.


7

இனியனைத் தேடிக்கொண்டு வந்த அருள் தெருமுனை திரும்பவும் இனியன் அங்கே வரவும் சரியாக இருந்தது.

“எங்கே இனியன் போயிருந்தே, உன்னை எங்கேயெல்லாம் தேடறது?”

சற்று சலிப்புடன் இனியனை நோக்கிக் கேட்டான் அருள். அவன் கேட்ட கேள்வியிலிருந்து நீண்ட நேரமாக அவனைத் தேடி அலைந்திருக்கிறான் என்பது இனியனுக்குப் புரிந்தது. அலைந்து வந்த அவனைச் சமாதானப்படுத்தும் வகையில் பதில் கூறினான் இனியன்.

“நம்ம மாணிக்கத்தோட அம்மாவுக்கு உடல் நிலை ரொம்ப மோசமாயிடிச்சுடா. வேலைக்குப் போயிருந்த எங்கப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனே சொன்னேன். அவர் உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/46&oldid=489833" இலிருந்து மீள்விக்கப்பட்டது