பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

53


அலுவலகத்தில் காலடி வைத்ததுமே உரிமையாளர் முகத்தில்தான் ஞானசீலன் கண் விழித்தார். வாசலில் நிறுத்தியிருந்த காரிலிருந்து அதிபர் இறங்கும் நேரத்தில், ஞானசீலன் சைக்கிள் ரிக்க்ஷாவை விட்டு இறங்கினார்.

மாடிக்குச் சென்றதும் குசலம் பரிமாறப்பட்டது. அலுவலகத் தகவல்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

காலை பத்து மணிப் பொழுதுக்குப் பின் கடிகாரம் அத்துணை துரித கதியுடன் செல்ல எங்கே கற்றுக் கொண்டதோ ?

மத்தியானச் சாப்பாட்டுக்கு மணி அடித்தார்கள். பையன் சாப்பாட்டுப் பாத்திரத்துடன் ஞான சீலனுக்கு உணவு கொணரப் புறப்பட்டான்.

அது சமயம் அங்கு வந்த முதலாளி ஞானசீலனை அழைத்து, "இன்று உங்களுக்கு நம் பங்களாவில் சாப்பாடு. சில முக்கியமான விஷயங்கள் உங்களுடன் பேச வேண்டும்,” என்று சொல்லி நிறுத்தினார்.

'சரி' என்று தலையசைத்த ஞானசீலனுக்கு உள்ளுர ஏனோ ஒரு வகைப்பட்ட கலக்கமும், இனம் பகுத்துணர வாய்க்காத இன்பமும் மாறி மாறித் தோன்றலாயின!

10. சிரிக்கின்ற வரம்!

மயிலாப்பூரில் ஞானசீலனின் உரிமையாளரின் பங்களா இருந்தது.

அந்தப் பங்களாவை அடைந்த ஞானசீலன், பங்களாவின் 'பார்வையாளர் அறை'யில் கிடந்த சோபாவில் அமர்ந்தார். நான்கைந்து வகைப் பத்திரிகைகளையும் புரட்டின போது, அவருக்கு தி.மு.க. தரும்