பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


தலைவலிதான் மிஞ்சியது. அண்ணா பேசுகிறார், அண்ணா பேசுகிறார் என்று கொட்டை எழுத்தில் அவர்கள் பத்திரிகைகளில் எல்லாம் ஒரே மாதிரியாகப் போடுகிறார்களே, இத்தனை வருஷமாக அவர் பேசாத புதுப் பேச்சாக என்னதான் பேசியிருக்கிறார் என்று யாராவது சிந்திக்கிறார்களா? தலைவன் வேண்டியதுதான் ஒரு கட்சிக்கு. அதைப் போலவே, தலைவனுக்குப் பக்தி செலுத்தக் கூடிய தொண்டர்களும் வேண்டியதுதான். ஆனால் தலைவன் கண் மூடியாகவோ அல்லது தலைவனைப் பின்பற்றும் அடியவர்கள் கண்மூடிப் பக்தர்களாகவோ இருக்கலாகாது. அரசியல் என்பது சொந்த வாழ்வின் பிரச்சினையல்ல; பொது வாழ்வின் சங்கிலியுடன் பின்னிப் பிணைந்திட்ட ஒரு தளை. இவர்களுக்குக் கழகம் ஒரு கூத்து மேடையாகப் பயன்படும் ரகசியத்தைப் பொது ஜனங்கள் எப்போது தான் தெள்ளத் தெளிய உணரப் போகிறார்களோ ?”

ஒரு காலத்தில் கல்லூரி வாழ்வின் போது, தான் இருந்த கோலத்தை-கோலவெறியை-எண்ணினார்; வெட்கம் சூழ்ந்தது. தவறு இழைத்ததைச் சுட்டிய மன வளத்தின் தீர்க்க தரிசனப் புத்தியால் விளைந்த வெட்கம், அப்பொழுது இருந்த மனநிலையில் நடந்த சம்பவம் அது.

ஞானசீலனுக்குக் கல்லூரியில் அடியெடுத்தவுடனே, பொறுப்பற்ற சில மாணவர்களைப் போன்றே அவருக்கும் 'கறுப்பில்' ஒரு நாட்டம் உண்டாகிவிட்டது. இனம் பிரித்து, இனவெறி படித்துப் பேசிக் காலங் கடத்தி வந்த பேச்சாளர்களின் வாய்ப்பந்தல் பேச்சுக்களை எழுத்தின் மூலமாகவும் செவி வழியாகவும் கேட்டுக் கேட்டு வந்த அவருக்கு நெடுஞ்செழியனின் திருச்சி விஜயம் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. கிளைவ்