பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


ஒரு தட்டில் அறிய உதவும் காதல் என்பதெல்லாம் சுத்தப் புரட்டு! புரட்டிய ஏடுகள் சொல்வதைக் கேட்டுவிட்டு, ‘காதல்’ என்று புலம்புவது பேதைமை. இருமனமும் விவேகமான வழியில் இணைந்து ஒன்றுபடும் போது, காதலா பிறக்கிறது? ஊஹும், இல்லை; இல்லவே இல்லை!...அன்பு பிறக்கிறது! அன்பின் வழியது உயிர் நிலை என்பது தமிழ் மறை ஓதும் நீதியல்லவா? அன்பைக் கடந்து காதல் உருவாவதென்றால், அது எங்கனம் ஒரு நிலைப் பட்ட பண்புடன் விளங்கக்கூடும்?... இப்படிப்பட்ட நிலையற்ற கோளாறுகளினால்தான், காதலித்தவனைக் காதலி புறக்கணிப்பதும், காதலிக்கப்பட்டவளைக் காதலன் வஞ்சிப்பதும் போன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன! தியாகத்தால்தான் மானுடப் பிறப்பு சிறக்கிறது என்றால் அதே தியாகத்தாலேயே என் காதலை- அதாவது, நான் அன்புக்குக் கட்டுப் பட்டு அவரைக் காதலித்த பண்பாட்டை-நிலைப்படுத்திக் காட்டவேண்டி, என்னையே இழந்து, என் உரிமையை என் உயிர்த் தோழிக்குத் தானம் செய்து கொடுக்கத் திட்டம் செய்துவிட்டேன். அப்போது தானே, பெண்மைக்கு வாழ்த்துப் பாடிய அமர கவிக்கு என் ஆத்ம தரிசனமும் என் ஆத்ம சமர்ப்பணமும் பலன் கூற முடியும்?..

மனசிற்குள்ளாகப் படித்துப் பார்த்த பின், திருத்தங்களைச் செம்மைப்படுத்திக் கொண்டிருக்கையில், கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டபடியே, “பையா !” என்று அலட்டிய நேரத்தில், “ராதாதானுங்களே? அவன் ஜிபிஓவுக்குப் போயிருக்கான். வந்திடுவான், ஸார்!” என்ற பதில் கிடைக்கவே, ஞானசீலனுக்குப் பரம சந்தோஷம் பிடிகொடாமல் பாய்ச்சல் காட்ட, அவரும் அந்த