பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90✽பூவை. எஸ். ஆறுமுகம்


 தமக்கே உரிய ஓர் அழுத்தத்தோடு தெரிவித்தார். மற்ற நேரங்களில் அவர் சிந்தனை வேறு ஏதோ ஒரு விஷயத்தில், அல்லது நடப்பில் ஈடுபட்டிருந்தது என்பதை அவரது நெற்றிச் சுருக்கங்களும் நேத்திரங்களின் அமைப்புச் சுழற்சியும் அறிவித்துக் கொண்டிருந்தன.

பொழுது பட்டது.

ஒளி துளிர்த்தது.

“ஹல்லோ மிஸ்டர் ஞானசீலன்!” என்ற குரல் அவர் பிடரியைப் பிடித்து இழுத்து நிறுத்தியது. முகத்தில் முத்தமிட்டுப் பரப்பிய வேர்வையைத் துடைத்தார். பிறகு ஏறிட்டுப் பார்த்தார். இரு கண்களிலும் இரு உருவங்கள் தோன்றின. "வாருங்கள், செளக்கியமா?” என்று நகைக் கீற்றின் பிரகாசத்தில் வாஞ்சையையும் பிரதிபலித்தார். அருகில், குனிந்த தலையை நிமிர்த்தி நிமிர்த்திப் பார்த்தவளாக, அழகுப் பெண் ஒருத்தி நிற்கக் கண்டபோது, ஞானசீலனுக்கு மனத்தையும் புலன்களையும் என்னவோ செய்தது. எழுத்தாளர்கள், ஓவியர்கள் . என்றால் அவர்களுக்குத்தான் அழகை உபாசிக்கத் தெரியும். ஏனென்றால் அவர்களுக்கு அந்த அழகுதான் வாழ்வின் பொருளாகிறது. வாழ்வே அழகாகவும், அழகே வாழ்வாகவும் ஆகி முடிகிற ஒரு கட்டம் ஒரு விதி.

வந்தவர் மாசிலாமணி.

"உட்காருங்கள்.”

"பரவாயில்லை. நான் போகவேணும். இதுதான் என் பெண் ...கமலாட்சின்னு பேர். முன்னே சொல்லி யிருக்கேன். எங்கே உங்களுக்கு நினைவிருக்கப் போகுது?. உங்க கதையிலே நீங்க உண்டாக்குகிற பேருங்களை நினைப்பு வைக்கிறதுக்கே உங்களுக்கு முடியாது! அம்மா,