பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தாலி ஒன்று தரையில் விழுந்தது! நட்ட மரம்போன்று அப்படியே நின்றுவிட்ட அவன் சுய நினைவு பெற இரண்டு விநாடிகள் தேவைப்பட்டன. கால் சட்டை யின் இடுப்புப் பட்டையைப் புரட்டி, குறி என்ன போட்டிருக்கிறது என்று தேடிஞன். குறியைக் கொண்டுதானே அது யாருக்குச் சொந்தமானது என் பதை அறிந்துகொள்ள முடியும்? குறி ஏதும் காணப் படவில்லை. தரையில் தனித்திருந்த தங்க நகையின் பேரில் ஒற்றை கண்ணே நாட்டியவாறு, நரை திரண்ட தலைக் குடுமிக் கேசத்தை ஒரு தட்டுத் தட்டி முடிந்தான் அவன். குறிபோட மறந்துபூடிச்சுப் போலே! என்று முடிவு செய்து, குறிபோடும் மைச்சீசாவை எடுத்து, மூன்று புள்ளிகள் வைத்துவிட்டு, கால்சராயைத் துணி யுடன் துணியாக வீசிஞன். செட்டித் தெருப் பள்ளிக் கூடத்துக்குப் புதிசா மாத்தி வந்திருக்கிற வாத்தியார் ஐயாவோடது இந்தக் கால்சராய்! மகன் சொன்ன அடையாளம் இது! கறுப்பனின் மனம் அந்தத் திருமங்கல்யத்துடன் பிணந்து, கடந்த காலப் பணி மூட்டத்தைத் துண்டாடிப் பிளந்து பாய்ந்தபோது, அவனுடைய விழிகளிலிருந்து நீர்த்துளிகள் ஒவ்வொன்முகச் சிதறித் தெறித்து, விழுந்து கொண்டிருந்தன. - கித்தறிக்காடு என்று அந்த ஊருக்குப் பெயர். குக்கிராமம். அதன் வடக்குக் கோடியில்தான் சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் இருந்தன. அவற்றில் கறுப்ப :ளின் குடும்பமும் ஒன்று. அவன், அவனை நம்பியிருந்த அவனுடைய நித்திய வியாதிக்காரியான மனைவி ராக் காயி, அவன் மகன் சொக்கப்பன் ஆகிய மூவருக்கும் தலைமுறை தத்துவம்ாகக் கைக்கொண்டிருந்த வெளுப்பு