பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஆவல் புரளக் காத்துக் கிடந்ததற்குக் கணிக்கேது, வழக்கேது? ஆனல், அன்று தனக்கும் தன் கணவனுக்குமிடையே ஏற்பட்ட சிறு ஊடல் சர்ச்சை இப்படிப்பட்ட பெரும் பிளவை உண்டாக்கிவிடும் என்று சுலோ எப்படிக் கண் டிருப்பாள், பாவம்! சுலோ திருமதி ராகவனுக ஆன சுபயோக சுபதினத் தில் எத்தனை எத்தனையோ இன்பக் கனவுகள் கண்ட தென்னவோ வாஸ்தவம்தான்; வாஸ்தவம் என்ற அள வுக்கு முத்தாய்ப்பிடும் வகையில் அப்போதைய சூழ்நிலை யும் அனுசரணை புரிந்தது. அவள் ராகவனக் கரம் பற்றியதில் அவள் குடும்பத்தினருக்கே ஏகப்பட்ட மகிழ்ச்சி என்ருல், உரிமைக்காரிக்கு உண்டான பூரிப்புக் கும் புளகிதத்துக்கும் கேட்கவா வேண்டும்? அவள் கணவன் அப்போது இங்கிலீஷ்காரன் கம்பெனி ஒன்றில் "கிளார்க் ஆக இருந்தான்; கண் நிறைந்தும் இருந்தான். அவன் அவள் கருத்தைக் கவர்ந்தான்; அதைப்போல . சுலோசவுைம் அவனது மனத்தைக் கொள்ளே கொண் டாள். கொள்ளையடித்த பொருள்கள் என்ன தெரியுமா? அவைதாம் சுலோசனவின் உருக்கி வார்த்த மோகன உருவமும், இதயம் ஈர்க்கும் அழகு துள்ளும் கவர்ச்சி மிக்க அங்க அமைப்புக்களும். - தாம்பத்தியம் புன்னகையும் அழகு நிலவுமாக நடந்தது. - - - - ஒருநாள் சுலோசன தன் கணவனின் வரவிற்குக் காத்திருந்தாள். அவள் கையில் காப்பி இருந்தது. அவள் கணவன் ராகவன் வந்தான். அவன் கையில் கத்தை நோட்டுகள் இருந்தன. அன்று சம்பள நாள் :*: - அவள் அறிவாள். ஆனல் சம்பளத்