பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió3 தொகைக்கு மேல் இரட்டிப்பாகப் பணம் கரன்ஸி நோட். டுக்களின் ரூபத்தில் இருந்ததுதான் அவளுக்கு ஒன்றும் மட்டுப்படவில்லை. அதற்குப் பதினைந்தாம் நாள்தான் அவள் திகைப்பு அடங்கியது. அவள் ஓ’ வென்று அப் பொழுது அலறிஞள். ராகவனே ஆபீஸில் நிறுத்தி விட்டார்கள். அதற்காகத்தான் அம்மாதத்திய சம்பளத் துடன், உபரியாக ஒரு மாதச் சம்பளமும் கூடக் கிடைத் திருந்தது. கிடைத்த பணம் தீர்வதற்குள், மாதத்தில் பதினைந்து நாட்கள்தாம் அப்படி இப்படியென்று ஊர்ந்தன. அடுத்த பதினைந்து நாட்கள் சுலோசன படாத பாடு பட்டாள். ராகவன் பட்டணமெங்கும் அலேந்து திரிந்துவிட்டதாகவும் வேலை ஏதும் கிடைக்க வில்லை என்ற ஒப்பாரியுடனும் அவள் முன் வந்து நின்ருன். அண்டை அயலாரிடம் கடன் உடனே வாங்கி உணவு படைத்தாள் புருஷனுக்கு. இப்படி எத்தனை நாட்கள்தாம் ஒடும்-அதுவும் பட்டணத்திலே. கடைசி யில் அவளுடைய தாலி நீங்கலாக ஏனைய நகை நட்டு அனைத்தும் மார்வாடி கடைக்குப் போயின; அப்புறமும் இரண்டு மாத சாப்பாட்டுக்குத்தான் கணவனுக்கும். மனைவிக்கும் அவை உதவ முடிந்தது. அன்று அவர்கள் வீட்டின் அடுப்படியில் பூனே ராஜ்ய பாரம் நடத்தியது. சுலோ கையால் கன்னத்தைத் தாங்கியவாறு அமர்ந்திருந்தாள். என்ன ஆத்திரம் பற்றி எரிந்ததோ அவளுக்கு? உடனே கணவனிடம் ஓடிவந்து, ஆமாம்; இப்படியே நீங்கள் வேலை எதற்கும். முயற்சிக்காமல் கிடைத்த வேலையையும் உதறிவிட்டு இருந்தால் ஒரு பெண் பிள்ளை நான்தான் என்ன செய்ய முடியும் என்று கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? என்னுல் இனிமேல் உங்களுக்குப் பிடிசோறு போட. முடியாது. நீங்கள் எக்கேடோ கெட்டுப் போங்கள்