79
சரிந்து!’ ’
வகை வகையாக விளம்பரம் செய்யப்பட்டு, கண்ணுடிச் சட்டங்களிலே எழில் காட்டி ஏற்றம் கூட்டித் திகழ்ந்த ரதிகாப்பி’க்கான படங்களேப் பார்த்துப் பெருமிதம் அடைவதில்தான் அவனுக்கு எத்துணை ஆர்வம்!
காப்பியின் சுகந்த தெடி, நெடிதுயர்ந்தது.
பில் போட்டு முடித்ததும், கணக்குப்பிள்ளே பில் புஸ்தகத்தை நகர்த்தினர்; குறிப்புச் சிட்டையை எடுத்து கொண்டார்.
'இன்னிக்கு எப்படியும் விருதுநகருக்கு ட்ராப்ட் அனுப்பிடனும் வீட்டுக்கு ஆறு நூ று ரூபாய் எடுத்தனுப்பறேன்!”
'நல்லது!’
நாக்கு வறண்டது. காப்பி சாப்பிட்டால் தேவ லாம்போலிருந்தது. எடுபிடிப் பையனை அழைத்தான்.
அப்போது
முதலாளி: யாரோ வந்திருக்கிருங்க!” என்று பையன் முணுமுணுத்தான்.
கனகசபை ஏறிட்டுப் பார்த்தான்.
அடே, வாங்க சகலை' என்று வாய் வரவேற்க கைகள் மேஜைமீதிருந்த குறிப்பு-பேரேடுகளையும் 'செக் புத்தகத்தையும் எடுத்து வைக்க, கனகசபை வந்தவரை எடை போட்டான்.
வந்த பெரிய முத்துக்குமரன், கனகசபை மனைவியின் தமக்கை புருஷன். செயலாக இருந்த குடும்பம் செயல் தப்பிவிட்டது. மனிதர் கிறங்கிப் போயிருந்தார்.