பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வின் தளிர் உண்டு முடிந்தது. தாம்பூலம் தரித்துக்கொண்டு. கடைசிக் குழந்தையைக் கையுடன் அழைத்துக்கொண்ட செட்டியார்-உரிமையாளர், புறப்பட்டார். தயாராகக் காத்து நின்றது கார். கைகூப்பியவாறு அவர்களுக்கெல் லாம் நன்றி சொன்னர் செட்டியார். அவர்களுக்குக் கங்கு கரையற்ற சந்தோஷம். கார் புறப்பட்டது. அவர்கள் என்கிறேனே-அந்த அவர்கள், அந்தச் செட்டியாரின் கம்பெனியில் வேலே பார்ப்பவர்கள். மாதவன், சிதம்பரம், ராமனுதன், தியாகராஜன்-இது அவர்களது பெயர் ஜாபிதா. பொறுப்பு வாய்ந்த உத்தியோகங்கள்; பொறுப்புடன் நிர்வகித்தார்கள். நாளெல்லாம் ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளக் கூடாதே என்ற அனுதாப மேலிட் டால் ஒரு யோசனை சொன்னர் செட்டியார், மெஸ்’ ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்று. உரிமையாளரின் பூரண ஒத்துழைப்பில்-அதாவது பண உதவியினல் அடுத்த வாரமே மெஸ் ஒன்று ஜாம் ஜாம் என்று ஆரம்பமாயிற்று. அடுத்த சில நாளில் ஆபீஸில் வேலை பார்த்த அந்த நால்வர்களும் செட்டியாருக்கு படே' விருந்தொன்று வைத்தார்கள். செட்டியாரின் பெருந் தன்மைக்கு நன்றி சொல்ல வேண்டுமல்லவா!' முறை என்று வேறு உண்டல்லவா! செட்டியார் விருந்து முடிந்து காரில் புறப்பட்ட தருணம் அந்த