பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


நால்வர்களுக்கும் புன்னகை மெட்டிசைக்கக் கூறிய நன்றி மொழிகள் அவர்களுக்கு அமிர்ந்த தாரையாகச் சிந்தினதில் வியப்பேது? உங்களுக்கெல்லாம், ஊஹாம்- நமக்கெல்லாம் அடுத்த மாதம் ஒண்ணும் நம்பர் டின்னர் ஒன்று கைமேல் காத்திருக்கிறது. நம் நண்பர் தியாகு தன் பிரமச்சாரிய வாழ்வுக்கு முற்றுப் புள்ளி போடத் தீர்மானித்து விட்டார். அதாவது அவருக்குக் கல்யாணம்; ஒன்ருக இருக்கும் அவர் இரண்டாகப் போகின்ருர்...' என்ருன் மாதவன்.

  • நண்பருக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள்! அவரது தாம்பத்தியம் புதுமையுடன் திகழப் பிரார்த்திக் கிறேன்.”

இப்படி ஒன்றுபோல மற்றவர்கள் மூவரும் தங்கள் தங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்கள். தியாகராஜன் அப்பொழுது தன் எதிர்கால மனைவி பற்றிய இன்ப நினைவில் லயித்திருந்தானே, என்னவோ? அவனுடைய புன்னகை முகத்தில் வியர்வைத் துளிகளின் புள்ளிக் கோலத்துடன், இன்பக் கனவின் எழிற் கோலமும் கைலாகு கொடுத்துச் சேர்ந்து கொண்டன.

தியாகுவின் திருமண வைபவத்துக்கு அடியேன் தம்பதி சமேதராக ஒரு வாரம் முன்கூட்டியே வந்திருந்து கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி வைக்கச் சித்தமாக இருக்கிறேன். நண்பர் ராமனுதனும் தன் மனைவியைக் கூட்டி வந்துவிடுவார்...” என்று சொல்லிவிட்டு, நண்பர் குழாமைப் பார்த்தான் மாதவன்.

"ஆஹா, நானும் என் திருமதியைக் கட்டாயம். அழைத்து வந்துவிடுகிறேன்” என்ருன் ராமனதன் வெற்றிப் புன்னகை வசந்தம் பாட. " . . .