பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


யம் வைத்து எழுதிய கண்ணிர்க் கடிதங்கள் அத்தனையும் கூட என்னை மனித இதயம் கொண்டவனுக்க-மனிதப் பண்பு கொண்டவனுக்க வழி விடவில்லை. ஆனல் அன்று தாங்கள் தங்கள் துணைவி செய்த சிறு குற்றத்தை மன் னித்து விடவேண்டுமென்றும் தங்கள் மனைவி ரேனுகாவை நீங்கள் மீண்டும் ஏற்றுப் புது வாழ்வு தொடங்க வேண்டுமென்று உங்கள் மனைவியின் சார்பில் நான் கூறிய வாதங்கள் இதோ என் கண்களைத் திறந்துவிட்டன; என்னை அவை மனிதமனம் படைத்த வகை ஆக்கிவிட்டன; மனிதனுகி விட்டேன்! நான் அன்று உங்களிடம் உங்கள் இல்லாளின் பக்கம் வாதமிட்டு வடித்த அதே கண்ணிர் உங்கள் மனதை வெற்றி வழிக்கு மாற்றியது போல, அதே என் கண்ணிர் இந்த கடினத்தில் என் மனைவியின் தரப்பில் தர்க்கம் செய்து என் மனசாட்சியை வெற்றி கொண்டு என்னை யும் என் பிரிய மீளுவுக்குரிய வனுக்கி விட்டது! மரத்துப் போய்க் கிடந்த என் தார்மீக உணர்ச்சியும், அசட்டுக் கெளரவத்தினுலும் ஆத்திரத்தினுலும் அஸ்தமித்து விட்டிருந்த மனிதத் தன்மையும் அந்த சந்தர்ப்ப வேகத் தில் நான் பேசிய பேச்சினல் உதயமாகி என் வாழ் வையே ஒளி பெறச் செய்து, என் இதயத்தின் குரல் என்னைத் திருத்தி விட்டது விந்தைதான்! வாழ்வுக்குரிய புது வளத்திற்கும் வனப்பிற்கும் ஆசி.கூறட்டும். இனி என் மீனு பசுந்தளிர்! இதோ, இரவோடு இரவாக இன்தோ சிலோன் எக்ஸ்பிரவில் புறப்படுகிறேன். புனர் வாழ்வு பெற்ற மீனவுடன் புது வாழ்வு பெற்ற நான் புத்தம் புதிய உலகிலே புதுயுகம் தொடங்க அங்கு ஒடி வருகின்றேன்! மறந்து விட்டேன், பார்த்தீர்களா? வரும்போது ஆன் மீன, தங்கள் அன்பு ரேனுகாவையும் கையுடன்