பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஞ்சள் கருதாசி “ஆகா. அற்புதம்! என்று தன்னை மறந்து சொல்லியபடியே ஆனந்தமாகத் தலையை அசைத்த வண் னம் இருந்தாள் அவள். தன் உயரத்துக்குச் சரியாக நின்ற நிலைக் கண்ணுடி தன்னுடைய மனங் கொள்ளாத ஆனந்தத்தை அப்படியே பிரதிபலித்துக் காட்டி, முகம் மலரக் காட்சியளித்த விந்தையை அப்போதுதான் அவ ளால் ஊகிக்க முடிந்தது. அவளுக்கு மகிழ்வு நிலை கொள்ளவில்லை; பஞ்சு மெத்தைக் கட்டிலினின்றும் எழுத்தாள்; தளிர் விரல்களில் நடன முத்திரைகள் இயங்கின. . பாட்டு தொடர்ந்தது; ஆனந்தபைரவி இழைந்தது. ரேடியோக்ராம் அவளுடைய ஆர்வத்தையும் ஆனந் தத்தையும் கண்டு இனம் விளங்காமல் இருந்திருக்க வேண்டும்! அவள்: மங்கள நாயகி. இளநீலநிறப் பாதரஸ் வெள்ளத்தில் முக்கி மூழ்கி எழும்பிக் கொண்டிருந்த அவளிடம் வேலைக்காரன் இனிப்புச் சேதி ஒன்றைச் சமர்ப்பித்தான்; அவர் வந்து விட்டாராம்.' விருந்தினர்களை உபசரிக்கும் அறை அது, ஒவல்டின், கிரஷ், காப்பி, பால், மோர் எல்லாம் தனித்தனியே